தடாகம் பகுதியில், அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பெரும் பள்ளங்கள் சமன் செய்யும் பணிக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கோவை: தடாகம் பகுதியில், அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பெரும் பள்ளங்கள் சமன் செய்யும் பணிக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்த நிலையில் கனிம வளங்களை அதிகமாகப் சுரண்டப்படுவதாக புகார்கள் எழுந்தது.
இதனால் செங்கல் சூளைகள் இயங்கவும் அப்பகுதியில் மண் எடுக்கவும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண் பாண்டங்கள் செய்வதற்காக குறிப்பிட்ட அளவு மண் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், கோவை தடாகம் அடுத்துள்ள மாங்கரை பகுதியில் செங்கல் சூளைகள் இயங்கி வந்த போது அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதால் பெரும் பள்ளங்கள் உருவாகி இருந்ததை தற்போது சமன்செய்யும் பணியை செங்கள் சூளை நிருவனங்கள் செய்து வருகின்றன.
இயந்திரங்களை கொண்டு பெரும் குழியான பகுதிகள் சமன்செய்யபடும் வீடியோ வெளியான நிலையில் சமூக ஆர்வலர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்று சமன் செய்யப்பட்டு விட்டால் அதிகாரிகள் யாரேனும் வரும் போது அளவிற்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதும் கனிம வள கொள்ளை நடைபெற்றது. மறைக்கப்படும் எனவும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.