கோவையில் பரபரப்பு..!! அரசு மருத்துவமனை விழாவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் - திமுகவினர் இடையே மோதல்..!

அரசு நிகழ்ச்சி என்றால் திமுகவினர் வருவீர்களா? தொலைத்து விடுவேன் என அதிமுக எம்எல்ஏக்கள், திமுகவினரை ஒருமையில் மிரட்டியதாக கூறப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அரசு மருத்துவமனை அரசு நிகழ்ச்சிக்கு வந்த திமுகவினருக்கு அதிமுக எம்எல்ஏக்களால் மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அரசு சார்பில் ஆக்சிஜன் கொள்கலன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு, அதிமுக எம்எல்ஏக்கள் பிஆர்ஜி அருண்குமார், ஏகே.செல்வராஜ் உள்ளிட்ட அதிமுகவினரும் வந்திருந்தனர். அப்போது, திமுகவினரை தடுத்து நிறுத்தி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே தகராறு முற்றி, அது கைகலப்பாக மாறும் சூழல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசிக்கொண்டனர்.

அரசு நிகழ்ச்சி என்றால் திமுகவினர் வருவீர்களா? தொலைத்து விடுவேன் என அதிமுக எம்எல்ஏக்கள், திமுகவினரை ஒருமையில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் சேரலாதன் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு, திமுகவினரை அவமதித்ததாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளிடத்தில் புகார் அளிக்க உள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...