கோவையில் பரபரப்பு..!! அரசு மருத்துவமனை விழாவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் - திமுகவினர் இடையே மோதல்..!

அரசு நிகழ்ச்சி என்றால் திமுகவினர் வருவீர்களா? தொலைத்து விடுவேன் என அதிமுக எம்எல்ஏக்கள், திமுகவினரை ஒருமையில் மிரட்டியதாக கூறப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அரசு மருத்துவமனை அரசு நிகழ்ச்சிக்கு வந்த திமுகவினருக்கு அதிமுக எம்எல்ஏக்களால் மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அரசு சார்பில் ஆக்சிஜன் கொள்கலன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு, அதிமுக எம்எல்ஏக்கள் பிஆர்ஜி அருண்குமார், ஏகே.செல்வராஜ் உள்ளிட்ட அதிமுகவினரும் வந்திருந்தனர். அப்போது, திமுகவினரை தடுத்து நிறுத்தி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே தகராறு முற்றி, அது கைகலப்பாக மாறும் சூழல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசிக்கொண்டனர்.

அரசு நிகழ்ச்சி என்றால் திமுகவினர் வருவீர்களா? தொலைத்து விடுவேன் என அதிமுக எம்எல்ஏக்கள், திமுகவினரை ஒருமையில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் சேரலாதன் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு, திமுகவினரை அவமதித்ததாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளிடத்தில் புகார் அளிக்க உள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...