கோவையில் நட்சத்திர ஓட்டலில் டம்மி கைத்துப்பாக்கியுடன் கேரளா ஆசாமி கைது - போலீசார் தீவிர விசாரணை..!!

விசாரணையில், தன்னுடைய தந்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் என்றும் அவரிடமிருந்து இந்த துப்பாக்கி கிடைத்தது என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்.


கோவை: கோவையில் நட்சத்திர ஓட்டலில் கைத்துப்பாக்கியுடன் தங்கியிருந்த கேரள ஜோதிடர் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காட்டூர் உள்ள ஓட்டல்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஓட்டலில் உதவி ஆணையர் சதீஷ் குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு ஓட்டலில் ஜோசி (52) என்பவர் தங்கியிருந்தார். அவர் ஜோதிடர் என்பது தெரியவந்தது. அவர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்.

இந்த நிலையில், அவரது உடமைகளை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சூட்கேசுக்குள் ஒரு கைத்துப்பாக்கியை பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். அந்த துப்பாக்கி உரிமம் பெறப்படவில்லை.

ஜெர்மன் நாட்டு தயாரிப்பான அந்த கைத்துப்பாக்கியால் சுட்டால் டப் என்று சத்தம் வரும் குண்டு பாயாது. ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் தொடங்கும்போது வானத்தை நோக்கி சுட்டு தொடங்கி வைக்க இந்த துப்பாக்கியை பயன்படுத்தப்படும்.

இதனிடையே, யாரையாவது மிரட்டுவதற்காக துப்பாக்கியை ஜோதிடர் வைத்திருந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய தந்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் என்றும் அவரிடமிருந்து இந்த துப்பாக்கி கிடைத்தது என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...