விசாரணையில், தன்னுடைய தந்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் என்றும் அவரிடமிருந்து இந்த துப்பாக்கி கிடைத்தது என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்.
கோவை: கோவையில் நட்சத்திர ஓட்டலில் கைத்துப்பாக்கியுடன் தங்கியிருந்த கேரள ஜோதிடர் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காட்டூர் உள்ள ஓட்டல்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஓட்டலில் உதவி ஆணையர் சதீஷ் குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு ஓட்டலில் ஜோசி (52) என்பவர் தங்கியிருந்தார். அவர் ஜோதிடர் என்பது தெரியவந்தது. அவர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்.
இந்த நிலையில், அவரது உடமைகளை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சூட்கேசுக்குள் ஒரு கைத்துப்பாக்கியை பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். அந்த துப்பாக்கி உரிமம் பெறப்படவில்லை.
ஜெர்மன் நாட்டு தயாரிப்பான அந்த கைத்துப்பாக்கியால் சுட்டால் டப் என்று சத்தம் வரும் குண்டு பாயாது. ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் தொடங்கும்போது வானத்தை நோக்கி சுட்டு தொடங்கி வைக்க இந்த துப்பாக்கியை பயன்படுத்தப்படும்.
இதனிடையே, யாரையாவது மிரட்டுவதற்காக துப்பாக்கியை ஜோதிடர் வைத்திருந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய தந்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் என்றும் அவரிடமிருந்து இந்த துப்பாக்கி கிடைத்தது என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்.
கோவை காட்டூர் உள்ள ஓட்டல்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஓட்டலில் உதவி ஆணையர் சதீஷ் குமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு ஓட்டலில் ஜோசி (52) என்பவர் தங்கியிருந்தார். அவர் ஜோதிடர் என்பது தெரியவந்தது. அவர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்.
இந்த நிலையில், அவரது உடமைகளை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சூட்கேசுக்குள் ஒரு கைத்துப்பாக்கியை பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். அந்த துப்பாக்கி உரிமம் பெறப்படவில்லை.
ஜெர்மன் நாட்டு தயாரிப்பான அந்த கைத்துப்பாக்கியால் சுட்டால் டப் என்று சத்தம் வரும் குண்டு பாயாது. ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் தொடங்கும்போது வானத்தை நோக்கி சுட்டு தொடங்கி வைக்க இந்த துப்பாக்கியை பயன்படுத்தப்படும்.
இதனிடையே, யாரையாவது மிரட்டுவதற்காக துப்பாக்கியை ஜோதிடர் வைத்திருந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய தந்தை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் என்றும் அவரிடமிருந்து இந்த துப்பாக்கி கிடைத்தது என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்.