மேலும், மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் மிகவும் காலதாமதமாக வழக்கு பதிவு செய்துள்ளார்.
கோவை: கோவையில் பணிபுரிந்து வரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட காரணத்தினால் அவரை பணியிடை நீக்கம் செய்து கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
கோயம்புத்தூர் மாவட்ட காவல் துறையில் தீவிர குற்றப் பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக தற்போது பணிபுரிந்து வரும் J.கலையரசி என்பவர் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் மிகவும் காலதாமதமாக வழக்கு பதிவு செய்துள்ளார்.
பின்னர், பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு பொதுமக்களுக்கு பாதகமாக நடந்து கொண்டதால் கோயம்புத்தூர் சரக காவல்துறை துணைத் தலைவரின் ஆணைப்படி இன்று (7-ம் தேதி) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.