கோவையில் குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

மேலும், மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் மிகவும் காலதாமதமாக வழக்கு பதிவு செய்துள்ளார்.



கோவை: கோவையில் பணிபுரிந்து வரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட காரணத்தினால் அவரை பணியிடை நீக்கம் செய்து கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

கோயம்புத்தூர் மாவட்ட காவல் துறையில் தீவிர குற்றப் பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக தற்போது பணிபுரிந்து வரும் J.கலையரசி என்பவர் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் மிகவும் காலதாமதமாக வழக்கு பதிவு செய்துள்ளார்.

பின்னர், பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு பொதுமக்களுக்கு பாதகமாக நடந்து கொண்டதால் கோயம்புத்தூர் சரக காவல்துறை துணைத் தலைவரின் ஆணைப்படி இன்று (7-ம் தேதி) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...