பொள்ளாச்சியில் போலீசாருக்கு பயந்து சாக்கடைக்குள் ஒளிந்து கொண்ட திருடன்..! தீயணைப்பு வீரர்கள் உதவியோடு மீட்பு..!!

போலீசார் விசாரணையில் அவர் சூளேஸ்வரன்பட்டி சேர்ந்த ஹக்கீம் என்பதும், பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


கோவை: பொள்ளாச்சியில் காவல்துறைக்கு பயந்து சாக்கடைக்குள் இறங்கி ஒளிந்து கொண்ட திருடனை தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் உதவியோடு போலீசார் பிடித்தனர்.

பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் நேற்று இரவு மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த நபர் ஒருவர் காவல்துறை வாகனத்தை பார்த்தவுடன் தானாக சாக்கடைக்குள் இறங்கிக் கொண்டார். இதை கண்டு சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த நபரை வெளியே வரச் சொல்லி அழைத்தனர். ஆனால் அந்த நபர் சாக்கடைக்குள் நன்கு பதுங்கி கொண்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து சாக்கடைக்குள் பதுங்கி இருந்த நபரை வெளியே எடுத்தனர்.

பின்னர், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சூளேஸ்வரன்பட்டி சேர்ந்த ஹக்கீம் என்பதும், பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும், நேற்றிரவு பிரதேஷ் என்பவரிடம் செல்போனை திருடிக்கொண்டு வரும் போது தன்னை காவல்துறையினர் சந்தேகிப்பதாக நினைத்து சாக்கடைக்குள் இறங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட ஹக்கீமை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...