போலீசார் விசாரணையில் அவர் சூளேஸ்வரன்பட்டி சேர்ந்த ஹக்கீம் என்பதும், பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கோவை: பொள்ளாச்சியில் காவல்துறைக்கு பயந்து சாக்கடைக்குள் இறங்கி ஒளிந்து கொண்ட திருடனை தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் உதவியோடு போலீசார் பிடித்தனர்.
பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் நேற்று இரவு மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த நபர் ஒருவர் காவல்துறை வாகனத்தை பார்த்தவுடன் தானாக சாக்கடைக்குள் இறங்கிக் கொண்டார். இதை கண்டு சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த நபரை வெளியே வரச் சொல்லி அழைத்தனர். ஆனால் அந்த நபர் சாக்கடைக்குள் நன்கு பதுங்கி கொண்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து சாக்கடைக்குள் பதுங்கி இருந்த நபரை வெளியே எடுத்தனர்.
பின்னர், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சூளேஸ்வரன்பட்டி சேர்ந்த ஹக்கீம் என்பதும், பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், நேற்றிரவு பிரதேஷ் என்பவரிடம் செல்போனை திருடிக்கொண்டு வரும் போது தன்னை காவல்துறையினர் சந்தேகிப்பதாக நினைத்து சாக்கடைக்குள் இறங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட ஹக்கீமை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் நேற்று இரவு மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த நபர் ஒருவர் காவல்துறை வாகனத்தை பார்த்தவுடன் தானாக சாக்கடைக்குள் இறங்கிக் கொண்டார். இதை கண்டு சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த நபரை வெளியே வரச் சொல்லி அழைத்தனர். ஆனால் அந்த நபர் சாக்கடைக்குள் நன்கு பதுங்கி கொண்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து சாக்கடைக்குள் பதுங்கி இருந்த நபரை வெளியே எடுத்தனர்.
பின்னர், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சூளேஸ்வரன்பட்டி சேர்ந்த ஹக்கீம் என்பதும், பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், நேற்றிரவு பிரதேஷ் என்பவரிடம் செல்போனை திருடிக்கொண்டு வரும் போது தன்னை காவல்துறையினர் சந்தேகிப்பதாக நினைத்து சாக்கடைக்குள் இறங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட ஹக்கீமை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.