கோவை: கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி நேற்று இரவு திடீரென சூலூர் காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, காவல் நிலையத்தில் உள்ள கோப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகள் போன்றவற்றை ஆய்வு செய்தார். பின்னர், காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் அறிவுரை வழங்கியும், அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.
அவருடன் சென்ற, கோவை மாவட்டத்தில் பயிற்சியில் உள்ள 3 துணை கண்காணிப்பாளர்களுக்கு, வழக்கு சம்பந்தமான விவரங்களை விளக்கினார். மேலும், காவல் நிலையத்தில் பராமரிக்க வேண்டிய ஏடுகள் பற்றியும், காவல்துறையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றியும் அறிவுரைகள் வழங்கினார்,
கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி.
ஆய்வின் காரணமாக, சூலூர் காவல் நிலையம் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
அவருடன் சென்ற, கோவை மாவட்டத்தில் பயிற்சியில் உள்ள 3 துணை கண்காணிப்பாளர்களுக்கு, வழக்கு சம்பந்தமான விவரங்களை விளக்கினார். மேலும், காவல் நிலையத்தில் பராமரிக்க வேண்டிய ஏடுகள் பற்றியும், காவல்துறையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றியும் அறிவுரைகள் வழங்கினார்,
கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி.
ஆய்வின் காரணமாக, சூலூர் காவல் நிலையம் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.