விசாரணையில் அவர்கள் மதுவிற்கு அடிமையாகி இதுபோன்ற பல்வேறு அடிதடி பிரச்சனைகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்ததை தொடர்ந்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை: கோவையில் மது போதையில் கூலி தொழிலாளியை கடுமையாக தாக்கிய சிறுவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று, வேலையை முடித்து விட்டு வேலை பார்க்கும் கட்டிடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த போது, இளைஞர்கள் சிலர் அந்த கட்டிடத்திற்குள் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதைப் பார்த்த அண்ணாதுரை, வேலை நடந்துவரும் கட்டிடத்தில் மது அருந்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த இளைஞர்கள், அண்ணாதுரையை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அண்ணாதுரை முதலுதவி சிகிச்சைக்குப்பின் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை கைது செய்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் விஷ்னு, இளவரசன், அபிஷேக், சந்தோஷ், அபுதாஹிர், முருகன் என தெரிய வந்துள்ளது.
மேலும், இவர்கள். மதுவிற்கு அடிமையாகி இதுபோன்ற பல்வேறு அடிதடி பிரச்சினைகள் மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று அண்ணாதுரையை தாக்கியதை, அவர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவாரூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று, வேலையை முடித்து விட்டு வேலை பார்க்கும் கட்டிடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த போது, இளைஞர்கள் சிலர் அந்த கட்டிடத்திற்குள் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதைப் பார்த்த அண்ணாதுரை, வேலை நடந்துவரும் கட்டிடத்தில் மது அருந்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த இளைஞர்கள், அண்ணாதுரையை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அண்ணாதுரை முதலுதவி சிகிச்சைக்குப்பின் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை கைது செய்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் விஷ்னு, இளவரசன், அபிஷேக், சந்தோஷ், அபுதாஹிர், முருகன் என தெரிய வந்துள்ளது.
மேலும், இவர்கள். மதுவிற்கு அடிமையாகி இதுபோன்ற பல்வேறு அடிதடி பிரச்சினைகள் மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று அண்ணாதுரையை தாக்கியதை, அவர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.