துணிக்கடைக்கு சென்ற சமயத்தில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப்பை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை லட்சுமி மில் பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப்பை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போத்தனூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் நிஷாந்த் கிருஷ்ணா (37). இவர் கீரணத்தம் பகுதியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள துணிக்கடை முன்பு தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அந்த சமயத்தில் காரின் முன்பக்க சீட்டில் தனது லேப்டாப்பை வைத்திருந்தார்.
பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்த பொழுது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் உள்ளே இருந்த லேப்டாப் காணாமல் போயிருந்தது.
இதையடுத்து, நிஷாந்த் கிருஷ்ணா ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை போத்தனூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் நிஷாந்த் கிருஷ்ணா (37). இவர் கீரணத்தம் பகுதியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள துணிக்கடை முன்பு தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அந்த சமயத்தில் காரின் முன்பக்க சீட்டில் தனது லேப்டாப்பை வைத்திருந்தார்.
பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்த பொழுது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் உள்ளே இருந்த லேப்டாப் காணாமல் போயிருந்தது.
இதையடுத்து, நிஷாந்த் கிருஷ்ணா ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.