கோவை மக்களே உஷார்..! கொரோனா கிருமிநாசினி அடிப்பதாக கூறி ரூ.65 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர்கள்..!

கோவை சுந்தராபுரம் அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் 90 வயது முதியவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டு சமையல் அறைக்குள் சென்ற சமயத்தில் ரூ. 60 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.


கோவை: கோவையில் கொசு மருந்து அடிக்க வந்துள்ளதாக கூறி ரூ.65 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (90) நேற்று மதியம் இவர் வீட்டில் இருந்தார்.

அப்போது 30 மற்றும் 35 வயதுடைய இருவர் கொரோனா கிருமிநாசினி அடிக்க வந்துள்ளதாக கூறி, முதியவரிடம் ஆதார் கார்டு விபரங்களை கேட்டனர். முதியவர் பீரோவிலிருந்து ஆதார் கார்டை எடுத்துக் கொடுத்தார்.

அப்போது, ஒருவர் தண்ணீர் கேட்டதால், முதியவர் சமையலறைக்கு சென்றுள்ளார். தண்ணீருடன் வந்தபோது, இருவரையும் காணவில்லை. மேலும், 65 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த பர்ஸையும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், இதுகுறித்து அருகே வசிப்போர் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...