கோவை சுந்தராபுரம் அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் 90 வயது முதியவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டு சமையல் அறைக்குள் சென்ற சமயத்தில் ரூ. 60 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
கோவை: கோவையில் கொசு மருந்து அடிக்க வந்துள்ளதாக கூறி ரூ.65 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சுந்தராபுரம் அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (90) நேற்று மதியம் இவர் வீட்டில் இருந்தார்.
அப்போது 30 மற்றும் 35 வயதுடைய இருவர் கொரோனா கிருமிநாசினி அடிக்க வந்துள்ளதாக கூறி, முதியவரிடம் ஆதார் கார்டு விபரங்களை கேட்டனர். முதியவர் பீரோவிலிருந்து ஆதார் கார்டை எடுத்துக் கொடுத்தார்.
அப்போது, ஒருவர் தண்ணீர் கேட்டதால், முதியவர் சமையலறைக்கு சென்றுள்ளார். தண்ணீருடன் வந்தபோது, இருவரையும் காணவில்லை. மேலும், 65 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த பர்ஸையும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், இதுகுறித்து அருகே வசிப்போர் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.
கோவை சுந்தராபுரம் அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (90) நேற்று மதியம் இவர் வீட்டில் இருந்தார்.
அப்போது 30 மற்றும் 35 வயதுடைய இருவர் கொரோனா கிருமிநாசினி அடிக்க வந்துள்ளதாக கூறி, முதியவரிடம் ஆதார் கார்டு விபரங்களை கேட்டனர். முதியவர் பீரோவிலிருந்து ஆதார் கார்டை எடுத்துக் கொடுத்தார்.
அப்போது, ஒருவர் தண்ணீர் கேட்டதால், முதியவர் சமையலறைக்கு சென்றுள்ளார். தண்ணீருடன் வந்தபோது, இருவரையும் காணவில்லை. மேலும், 65 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த பர்ஸையும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், இதுகுறித்து அருகே வசிப்போர் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.