மசினகுடியில் ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் 12வது நாளாக இன்று நான்கு இடங்களில் பரன்கள் அமைத்து புலியின் நடமாட்டம் கண்காணிப்பு..!!

நான்கு பரன்களில் 4 வன கால்நடை மருத்துவர்களை கொண்டு மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு முதன்மை உயிரின வன பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார்.



நீலகிரி: மசினகுடி T23 புலியை பிடிக்கும் பணியில் 12வது நாளாக இன்று நான்கு இடங்களில் பரன்கள் அமைத்து புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு முதன்மை உயிரின வன பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார்.

இது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடலூர் தேவன் எஸ்டேட், மேபீல்டு, சிங்காரா பகுதியில் 4 நபர்களையும், 40க்கும் மேற்பட்ட கால்நடைகளை கொன்ற T23 புலியை பிடிக்கும் பணி தொடர்ந்து 12வது நாளாக நடைபெற்ற வருவதாகவும், T23 புலியை பிடிக்கும் பணியில் ஈடுபடும் வன ஊழியர்கள் மற்றும் புலியின் பாதுகாப்பு உறுதி செய்த பிறகு புலியை பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இந்த புலி முதிர்ச்சியின் காரணமாக கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கி வருவதாகவும், வேட்டை தடுப்பு பழங்குடியினர்கள் ஆலோசனையின் படி புலியை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், T23 புலி பிடிபட்டவுடன் கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

வேட்டை தடுப்பு காவலர்களுக்கு 12,500 லிருந்து 15,000 சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மனித-வன விலங்கு மோதல்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் வகையில், மக்களை அச்சுறுத்தி இடையூறு செய்யும் வனவிலங்குகளை கண்டு அரிந்து ரேடியோ காலரிங் மூலம் மற்றும் வன ஊழியர்கள் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

வயது முதிர்வு காரணமாக வேட்டையாடும் திறனை இழந்ததால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளை தாக்குவதாகவும், புது யுக்திகளை கையாண்டு t23 புலி பிடிக்கப்படும் என தமிழ்நாடு முதன்மை உயிரின வன பாதுகாவலர் உறுதியளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...