கோவையில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்த 101 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

கோவையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனைச் செய்த 101 கிலோ புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்ட வியாபாரியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால் இளைஞர்கள் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியது.

இந்நிலையில் தான் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி இன்று சூலூர் காவல் நிலையப் பகுதியில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக ஆய்வாளர் திமாதையன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர், அவரது குழுவினருடன் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

அப்போது சட்டத்திற்கு விரோதமாக புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த சூலூர் அயோத்தியபுரத்தைச் சேர்ந்த 29 வயதான மாரிராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுக்குறித்துசூலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்ட போது அவரிடமிருந்து சுமார் 101 கிலோ கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் அவர் அப்பொருட்களை சட்டவிரோதமாக கடைகளுக்கு கொண்டு சென்று விற்கப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...