கோவையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனைச் செய்த 101 கிலோ புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்ட வியாபாரியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால் இளைஞர்கள் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியது.
இந்நிலையில் தான் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனை நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி இன்று சூலூர் காவல் நிலையப் பகுதியில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக ஆய்வாளர் திமாதையன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர், அவரது குழுவினருடன் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
அப்போது சட்டத்திற்கு விரோதமாக புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த சூலூர் அயோத்தியபுரத்தைச் சேர்ந்த 29 வயதான மாரிராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுக்குறித்துசூலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்ட போது அவரிடமிருந்து சுமார் 101 கிலோ கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் அவர் அப்பொருட்களை சட்டவிரோதமாக கடைகளுக்கு கொண்டு சென்று விற்கப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.