கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைத்து ஆர்ப்பாட்டம்!

சென்னையில் டாஸ்மாக் கடை ஒன்றில் புகுந்து ஊழியர்களை வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவை பீளமேடு பகுதியில் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை: டாஸ்மாக் கடை ஊழியர்களை வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவை பீளமேடு பகுதியில் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த இருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடை அடைப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதன் ஒரு பகுதியாகக் கோவை பீளமேடு பகுதியில் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு சம்பவத்தில் ஈட்டுப்பட்ட மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அப்போது முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...