வால்பாறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட காவல்துறை; போதைப்பொருள் விற்பனை செய்தால் கடும் அபராதம் என எச்சரிக்கை

வால்பாறையில் அதிகளவில் போதைப்பொருள் விற்பனையாவதாக எழும் புகாரினையடுத்து பல்வேறு கடைகளில் போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள்கள் , ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் மது சில்லிங் வியாபாரத்தைத் தடுத்திட வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் காவல்துறையினர் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் அடங்கிய குழுவினர் வால்பாறை நகரின் மையபகுதியில் உள்ள புது மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று எச்சரிக்கை செய்தனர். மேலும் கொரானா தொற்றை தடுத்திடக் கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருத்தல் வேண்டும் என்று கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதோடு கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருத்தல் அவசியம் என வற்புறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள். இதுப்போன்ற சோதனைகள் வால்பாறை பகுதியில் அடிக்கடி நடைபெறும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...