வால்பாறையில் அதிகளவில் போதைப்பொருள் விற்பனையாவதாக எழும் புகாரினையடுத்து பல்வேறு கடைகளில் போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள்கள் , ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் மது சில்லிங் வியாபாரத்தைத் தடுத்திட வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் காவல்துறையினர் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் அடங்கிய குழுவினர் வால்பாறை நகரின் மையபகுதியில் உள்ள புது மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று எச்சரிக்கை செய்தனர். மேலும் கொரானா தொற்றை தடுத்திடக் கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருத்தல் வேண்டும் என்று கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதோடு கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருத்தல் அவசியம் என வற்புறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள். இதுப்போன்ற சோதனைகள் வால்பாறை பகுதியில் அடிக்கடி நடைபெறும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் காவல்துறையினர் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் அடங்கிய குழுவினர் வால்பாறை நகரின் மையபகுதியில் உள்ள புது மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று எச்சரிக்கை செய்தனர். மேலும் கொரானா தொற்றை தடுத்திடக் கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருத்தல் வேண்டும் என்று கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதோடு கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருத்தல் அவசியம் என வற்புறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள். இதுப்போன்ற சோதனைகள் வால்பாறை பகுதியில் அடிக்கடி நடைபெறும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.