தொடர் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட செல்வகுமார் என்கிற கோபால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவை பொள்ளாச்சி பகுதிகளில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் சட்டத்தில் அடைக்கக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.
இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலைய பகுதியில் தொடர் கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட செல்வகுமார் என்கிற கோபால் என்பவரைக் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, கோபாலை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கோபால் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலைய பகுதியில் தொடர் கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட செல்வகுமார் என்கிற கோபால் என்பவரைக் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, கோபாலை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கோபால் சிறையில் அடைக்கப்பட்டார்.