கோவையில் அரிசி குடோனில் வைத்திருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் திருட்டு - கடை ஊழியர்கள் 4 பேரை போலீசார் வலைவீச்சு..!!

அரிசி மூட்டைகளை உரிமையாளர் கணக்கிட்ட போது பாஸ்மதி அரிசி உள்ளிட்ட விலை மதிப்புள்ள அரிசி மூட்டைகள் ரூ. 20 லட்சம் மதிப்புக்கு திருடு போயிருப்பது தெரிய வந்தது.


கோவை: கோவையில் அரிசி குடோனில் வைத்திருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள் திருட்டு போன சம்பவத்தில் அரிசி கடை ஊழியர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தியாகராய புது வீதியில் அரிசி கடை வைத்துள்ள கிருஷ்ணகுமார் மற்றும் அவருடைய மனைவி கீதா அரிசி கடை நடத்தி வருகின்றனர்.

கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டாக போதுமான வியாபாரம் நடைபெறவில்லை. இருப்பினும் அரிசி மூட்டைகள் குடோனில் தொடர்ந்து குறைந்து கொண்டு வந்து உள்ளது.

இதனிடையே, அரிசி மூட்டைகளை உரிமையாளர் கணக்கிட்ட போது பாஸ்மதி அரிசி உள்ளிட்ட விலை மதிப்புள்ள அரிசி மூட்டைகள் ரூபாய் 20 லட்சம் மதிப்புக்கு திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து ஆர்.எஸ்.போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது அரிசி கடைகளில் வேலை பார்த்து வேலைகளிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களும், தற்போது வேலையில் உள்ள 2 ஊழியர்களும் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...