உ.பியில் பிரியாகாந்தி கைது செய்யப்பட்டதிற்கு எதிராக திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்!

உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் விவசாயிகள் பலர் உயிரிழ்ந்த நிலையில், அவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச்சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். எனவே இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் விதமாக திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் மீது காரை ஏற்றிக்கொன்ற அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அங்கு வன்முறை வெடித்தது.

இதில் 8 விவசாயிகள் உயிரிழ்ந்ததாகக்கூறப்பட்டு வரும் நிலையில், அம்மாநில அரசு இதனை மறுத்து வருகிறது. இந்நிலையில் தான் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவிப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி நேற்று சென்றிருந்தார். ஆனால் பன்வீர்பூர் கிராமத்திற்கு உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதோடு போலீசார் பிரியங்காகாந்தியை கைது செய்தனர்.



இந்நிலையில் இந்த கைதுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் விதமாகவும், விவசாயிகளின் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியக் காவல்துறை மற்றும் பா.ஜ.க அரசைக்கண்டித்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் மத்திய மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...