உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் விவசாயிகள் பலர் உயிரிழ்ந்த நிலையில், அவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச்சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். எனவே இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் விதமாக திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது.
திருப்பூர்: உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் மீது காரை ஏற்றிக்கொன்ற அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அங்கு வன்முறை வெடித்தது.
இதில் 8 விவசாயிகள் உயிரிழ்ந்ததாகக்கூறப்பட்டு வரும் நிலையில், அம்மாநில அரசு இதனை மறுத்து வருகிறது. இந்நிலையில் தான் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவிப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி நேற்று சென்றிருந்தார். ஆனால் பன்வீர்பூர் கிராமத்திற்கு உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதோடு போலீசார் பிரியங்காகாந்தியை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த கைதுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் விதமாகவும், விவசாயிகளின் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியக் காவல்துறை மற்றும் பா.ஜ.க அரசைக்கண்டித்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் மத்திய மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் 8 விவசாயிகள் உயிரிழ்ந்ததாகக்கூறப்பட்டு வரும் நிலையில், அம்மாநில அரசு இதனை மறுத்து வருகிறது. இந்நிலையில் தான் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவிப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி நேற்று சென்றிருந்தார். ஆனால் பன்வீர்பூர் கிராமத்திற்கு உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதோடு போலீசார் பிரியங்காகாந்தியை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த கைதுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் விதமாகவும், விவசாயிகளின் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியக் காவல்துறை மற்றும் பா.ஜ.க அரசைக்கண்டித்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் மத்திய மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.