கலைஞர் கருணாநிதி, மு.க ஸ்டாலின் வேடமணிந்து பொள்ளாச்சியில் வாக்குச்சேகரிப்பு; தந்ரூபமாக இருந்தது என மக்கள் ஆச்சரியம்!

பொள்ளாச்சி அருகே கிராம ஊராட்சிமன்றத்தலைவர் பதவிக்கு வாக்குச்சேகரிப்பின் போது, திடீரென மு.கருணாநிதி, மு.க ஸ்டாலின் வேடமணிந்து வந்த நபர்களை மக்கள் ஆச்சரியத்துடன் வரவேற்றனர்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியையடுத்த திவான்சாபுதூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதிவிக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்காக தற்போது தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட பிறக்கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் பொதுமக்கள் மத்தியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று திவான்சாபுதூர் கிராமத்தில் மழை அதிகளவில் பெய்ததால் தனியார் மண்டபத்தில் வாக்கு சேகரிப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பழனிசாமி வேட்பாளர் கலைவாணியை ஆதரித்து அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் வாக்குகளைச் சேகரித்தார்.



அப்போது யாரும் சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில், இந்த நிகழ்வில் திடீரென கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்று வேடமணிந்த இருவர் கூட்டத்திற்கு நடுவே நுழைந்ததும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் இருவரையும் பார்த்தனர்.



தத்ரூபமாக இருப்பதாக தெரிவித்த பொதுமக்கள் அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.



பின்னர் கூட்டத்தின் முடிவில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் கலைஞர் கருணாநிதி வேடம் அணிந்திருந்த இருவரும் அங்கிருந்த பொதுமக்களை வணங்கி ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலைவாணியை ஆதரித்து வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...