மேலும், கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க 600 களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுகள் பரவுவதைத் தடுக்க மாநகராட்சி 100 வார்டுகளிலும் சோதனைப் பணியில் ஈடுபட 600 களப்பணியாளர்களை மாநகராட்சி நியமித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
‘கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மாநகராட்சி பகுதிகளில் 19 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் தற்போது வரை யாரும் பாதிக்கப்படவில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் தேங்குவது, கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் சோதனை மேற்கொள்ள 600 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்தால் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியும். நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். கொசுக்கள் உற்பத்தியாகக் காரணமாக உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்', என்று தெரிவித்தார்.
மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுகள் பரவுவதைத் தடுக்க மாநகராட்சி 100 வார்டுகளிலும் சோதனைப் பணியில் ஈடுபட 600 களப்பணியாளர்களை மாநகராட்சி நியமித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
‘கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மாநகராட்சி பகுதிகளில் 19 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் தற்போது வரை யாரும் பாதிக்கப்படவில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் தேங்குவது, கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் சோதனை மேற்கொள்ள 600 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்தால் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியும். நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். கொசுக்கள் உற்பத்தியாகக் காரணமாக உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்', என்று தெரிவித்தார்.