வனத்தை பாதுகாக்கும் பொருட்டு உறுதிமொழி எடுத்தல், புலி உருவம் பதித்த மாஸ்க் குழந்தைகளுக்கு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோவை: கோவை குற்றாலத்தில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் வனத்தை பாதுகாக்கும் பொருட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வன உயிரின வார விழாவினை முன்னிட்டு கடந்த 3ம் தேதி ஞாயிறன்று கோவை வனக்கோட்டம், போலாம்பட்டி வனச்சரகம், கோவை குற்றாலத்தில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள், வனத்தை பாதுகாக்கும் பொருட்டு உறுதிமொழி எடுத்தல், கையெழுத்து இடுதல், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகித்தல், புலி உருவம் பதித்த மாஸ்க் குழந்தைகளுக்கு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிகள் கோவை வனக் கோட்ட மாவட்ட வன அலுவலர், உதவி வன பாதுகாவலர், WGWCT குழுவினர் மற்றும் போலாம்பட்டி வனச்சரக பணியாளர்களுடன் நடத்தப்பட்டது.

தமிழக அரசு குறிப்பிட்ட கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர். மேலும், நெகிழ்ச்சியுடன் தங்கள் கொண்டாட்டங்களை அடலுடனும், பாடலுடனும், பகிர்ந்து கொண்டனர்.
வன உயிரின வார விழாவினை முன்னிட்டு கடந்த 3ம் தேதி ஞாயிறன்று கோவை வனக்கோட்டம், போலாம்பட்டி வனச்சரகம், கோவை குற்றாலத்தில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள், வனத்தை பாதுகாக்கும் பொருட்டு உறுதிமொழி எடுத்தல், கையெழுத்து இடுதல், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகித்தல், புலி உருவம் பதித்த மாஸ்க் குழந்தைகளுக்கு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிகள் கோவை வனக் கோட்ட மாவட்ட வன அலுவலர், உதவி வன பாதுகாவலர், WGWCT குழுவினர் மற்றும் போலாம்பட்டி வனச்சரக பணியாளர்களுடன் நடத்தப்பட்டது.
தமிழக அரசு குறிப்பிட்ட கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர். மேலும், நெகிழ்ச்சியுடன் தங்கள் கொண்டாட்டங்களை அடலுடனும், பாடலுடனும், பகிர்ந்து கொண்டனர்.