இந்நிறுவனங்கள், வரி செலுத்தவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சியில் 1 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வசூலிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி முழுவதும் தனியார் அமைப்புடன் இணைந்து 400 இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது இந்த கட்டமைப்புகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்கு ரூ. 1 கோடிக்கு மேல் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள பெரிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, அவர்கள் வரி செலுத்தவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், வரி வசூல் தொடர்பாக வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மாநகராட்சியில் சில முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் கூறினார்.