பாதுகாப்பு காரணம் கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளதால், கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவையின் முக்கிய சுற்றுலாத்தலமாக சாடிவயல் பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோவை குற்றாலம் செயல்பட்டு வருகிறது.
கொரோனா காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக சற்று குறைந்த காரணத்தினால் சமூக இடைவெளியுடன், அரசு விதித்த பாதுகாப்பு விதிமுறைகளை கையாண்டு ஒரு மணி நேரத்திற்கு 40 பேர் என்கின்ற விதத்தில் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளதால், இன்று முதல் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணம் கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் மூடப்படுவதாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, இன்று காலை தடை அறிவிப்பு தெரியாமல் சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கோவையின் முக்கிய சுற்றுலாத்தலமாக சாடிவயல் பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோவை குற்றாலம் செயல்பட்டு வருகிறது.
கொரோனா காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக சற்று குறைந்த காரணத்தினால் சமூக இடைவெளியுடன், அரசு விதித்த பாதுகாப்பு விதிமுறைகளை கையாண்டு ஒரு மணி நேரத்திற்கு 40 பேர் என்கின்ற விதத்தில் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளதால், இன்று முதல் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணம் கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் மூடப்படுவதாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, இன்று காலை தடை அறிவிப்பு தெரியாமல் சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.