கோவையில் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது..!

விசாரணையில் ஆட்டோ டிரைவர் தனக்கு ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து பிளஸ் 2 மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.


கோவை: கோவையில் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று 12ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை காணவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அந்த மாணவி கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து சாய்பாபா கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், அந்த மாணவியை ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கோவை வடவள்ளி அருகே நாகராஜன் புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (26) என்பதும் ஏற்கனவே திருமணம் ஆனவர், தனக்கு நடந்த திருமணத்தை மறைத்து பிளஸ் 2 மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கு கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நிர்மலா போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவையில் பிளஸ் 2 மாணவியை ஆட்டோ டிரைவர் கடத்தி 2-வது திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...