விசாரணையில் ஆட்டோ டிரைவர் தனக்கு ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து பிளஸ் 2 மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
கோவை: கோவையில் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று 12ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை காணவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அந்த மாணவி கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து சாய்பாபா கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், அந்த மாணவியை ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கோவை வடவள்ளி அருகே நாகராஜன் புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (26) என்பதும் ஏற்கனவே திருமணம் ஆனவர், தனக்கு நடந்த திருமணத்தை மறைத்து பிளஸ் 2 மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கு கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நிர்மலா போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவையில் பிளஸ் 2 மாணவியை ஆட்டோ டிரைவர் கடத்தி 2-வது திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை காணவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அந்த மாணவி கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து சாய்பாபா கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், அந்த மாணவியை ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கோவை வடவள்ளி அருகே நாகராஜன் புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (26) என்பதும் ஏற்கனவே திருமணம் ஆனவர், தனக்கு நடந்த திருமணத்தை மறைத்து பிளஸ் 2 மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கு கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நிர்மலா போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவையில் பிளஸ் 2 மாணவியை ஆட்டோ டிரைவர் கடத்தி 2-வது திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.