உள்ளாட்சி தேர்தலில் பாஜக போட்டியிடும் இடங்களில் பொதுமக்களின் ஆதரவு அதிக அளவில் இருந்து வருவதாகவும் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோவை: பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது அவர்களது சொந்த விருப்பம் என்றும், அவர்களது முடிவில் பாஜக தலையிடாது என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் 118வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்ட சூழ்நிலையில், திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திருப்பூர் குமரனின் 118வது பிறந்த நாளான இன்று பாஜக சார்பில் திருப்பூர் குமரன் நான் இருந்த இடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். இங்கு நடந்த தடியடி சம்பவத்தில் தான் தேசியக் கொடியை கையில் பிடித்தவாறே திருப்பூர் குமரன் உயர்ந்துள்ளார். அவரது தியாகம் நிறைந்த வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது என்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, இது அவர்களின் கட்சி சார்ந்த தனிப்பட்ட விஷயம். அவர்களின் கட்சியை வளர்க்க எடுக்கப்பட்ட முடிவு, இதில் பாஜக தலையிடாது என்று தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக போட்டியிடும் இடங்களில் பொதுமக்களின் ஆதரவு அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த முறை போட்டியிடும் அனைத்து இடங்களிலும் நல்ல வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் மக்களின் மனநிலை என்பது மாறக்கூடிய ஒன்றானது. மக்கள் எங்களுக்கு அவர்களுடைய ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது பாஜகவினர் அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் மற்றும் முன்னாள் முதலமைச்சரின் உருவப்படங்களை கட்சிக்கொடி வைத்து மறைத்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் 118வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்ட சூழ்நிலையில், திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திருப்பூர் குமரனின் 118வது பிறந்த நாளான இன்று பாஜக சார்பில் திருப்பூர் குமரன் நான் இருந்த இடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். இங்கு நடந்த தடியடி சம்பவத்தில் தான் தேசியக் கொடியை கையில் பிடித்தவாறே திருப்பூர் குமரன் உயர்ந்துள்ளார். அவரது தியாகம் நிறைந்த வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது என்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, இது அவர்களின் கட்சி சார்ந்த தனிப்பட்ட விஷயம். அவர்களின் கட்சியை வளர்க்க எடுக்கப்பட்ட முடிவு, இதில் பாஜக தலையிடாது என்று தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக போட்டியிடும் இடங்களில் பொதுமக்களின் ஆதரவு அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த முறை போட்டியிடும் அனைத்து இடங்களிலும் நல்ல வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் மக்களின் மனநிலை என்பது மாறக்கூடிய ஒன்றானது. மக்கள் எங்களுக்கு அவர்களுடைய ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது பாஜகவினர் அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் மற்றும் முன்னாள் முதலமைச்சரின் உருவப்படங்களை கட்சிக்கொடி வைத்து மறைத்தது குறிப்பிடத்தக்கது.