வால்பாறை கல்லார்குடி மக்களுக்கான மாற்றுக் குடியிருப்பு அறவழிப் போராட்டம்.!!

கல்லார்குடி மக்கள் கடந்த காந்தி ஜெயந்தி அன்று முதல் அறவழி போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லார்குடி பழங்குடியின மக்கள் நடத்திவந்த அறவழி போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.


வால்பாறை: வால்பாறை கல்லார்குடி மக்களுக்கான மாற்றுக் குடியிருப்பு அறவழிப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட் பகுதியில் அடர்ந்த வனப் பகுதியில் வசிக்கும் கல்லார்குடி பழங்குடியின மக்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடியிருப்பை இழந்தனர்.

தொடர்ந்து தெப்பக்குள மேடு என்ற இடத்தில் தற்காலிக குடிசை அமைத்து வசித்து வந்தனர். அனுமதியின்றி வசிப்பதாகக் கூறி வனத்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் தாய்முடி தேயிலைத் தோட்டத்தில், இருபத்தி மூன்று குடும்பங்களுக்கு எட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டு வசித்து வருகின்றனர்.

கல்லாறு பழங்குடியின மக்கள் கடந்த மூன்று வருடங்களாக தங்களுக்கு தங்கள் கலாச்சாரத்தின் அடிப்படையில் அடர்ந்த வனப் பகுதியான தெப்பக்குளம் மேடு பகுதியில் குடியிருப்புகளை அமைக்க அனுமதி வழங்குமாறு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த காந்தி ஜெயந்தி அன்று முதல் அறவழி போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அதன் மாநில நிர்வாகிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ ராவ் ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலர் கணேசன், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வால்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் ஆகியோர் முன்னிலையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் கல்லார்குடி செட்டில்மென்ட் பகுதி மலைவாழ் மக்களுக்கு அவர்களின் கிராமசபைக் கூட்டத்தின் தீர்மானத்தின் படி தெப்பக்குள மேடு பகுதியில் அவர்கள் குடியிருப்பு அமைக்க விரைவில் அனுமதி பெற்றுத் தரப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக கல்லார்குடி பழங்குடியின மக்கள் நடத்திவந்த அறவழி போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், ஆலோசகர் தங்கராஜ், மாவட்டச் செயலாளர் சந்திரசேகர், வால்பாறை பகுதி செயலாளர் செல்வம், கல்லாறு குடி தலைவர் தங்கசாமி, மகளிர் அணி ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...