தொழில் வரி பிடித்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் வால்பாறை முடீஸ் பகுதியிலுள்ள ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கத் தலைவர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வால்பாறை: தொழில் வரி பிடித்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் வால்பாறை முடீஸ் பகுதியிலுள்ள ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கத் தலைவர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 60-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசின் தேயிலைத் தோட்ட கழக தேயிலைத் தோட்டங்களும் அடங்கும்.
இவற்றில் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களாக சுமார் 50-ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தேயிலைத் தோட்ட கழக தொழிலாளர்களுக்குத் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை.
ஆனால் தனியார் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கம் தொழிலாளர்களின் கோரிக்கையைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழில் வரியை பிடித்தம் செய்து வருகின்றனர்.
இதனைக் கண்டித்து வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் வால்பாறை முடீஸ் பகுதியிலுள்ள ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கத் தலைவர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தொழிற்சங்க கூட்டுக் குழு அமைப்பின் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் சலாவுதீன் காங்கிரஸ் யூ கருப்பையா, விடுதலை சிறுத்தை வீரமணி, கேசவ மருகன், இ.கம்.மோகன், மாணிக்கம் பெரியசாமி, கம்.பரமசிவம் உட்பட ஏராளமான தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 60-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசின் தேயிலைத் தோட்ட கழக தேயிலைத் தோட்டங்களும் அடங்கும்.
இவற்றில் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களாக சுமார் 50-ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தேயிலைத் தோட்ட கழக தொழிலாளர்களுக்குத் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை.
ஆனால் தனியார் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கம் தொழிலாளர்களின் கோரிக்கையைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழில் வரியை பிடித்தம் செய்து வருகின்றனர்.
இதனைக் கண்டித்து வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் வால்பாறை முடீஸ் பகுதியிலுள்ள ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கத் தலைவர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தொழிற்சங்க கூட்டுக் குழு அமைப்பின் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் சலாவுதீன் காங்கிரஸ் யூ கருப்பையா, விடுதலை சிறுத்தை வீரமணி, கேசவ மருகன், இ.கம்.மோகன், மாணிக்கம் பெரியசாமி, கம்.பரமசிவம் உட்பட ஏராளமான தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.