ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்.!!

தொழில் வரி பிடித்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் வால்பாறை முடீஸ் பகுதியிலுள்ள ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கத் தலைவர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


வால்பாறை: தொழில் வரி பிடித்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் வால்பாறை முடீஸ் பகுதியிலுள்ள ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கத் தலைவர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 60-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசின் தேயிலைத் தோட்ட கழக தேயிலைத் தோட்டங்களும் அடங்கும்.

இவற்றில் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களாக சுமார் 50-ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தேயிலைத் தோட்ட கழக தொழிலாளர்களுக்குத் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை.

ஆனால் தனியார் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கம் தொழிலாளர்களின் கோரிக்கையைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தொழிலாளர்களின் சம்பளத்தில் தொழில் வரியை பிடித்தம் செய்து வருகின்றனர்.

இதனைக் கண்டித்து வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் வால்பாறை முடீஸ் பகுதியிலுள்ள ஆனைமலை தேயிலைத் தோட்ட அதிபர் சங்கத் தலைவர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தொழிற்சங்க கூட்டுக் குழு அமைப்பின் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் சலாவுதீன் காங்கிரஸ் யூ கருப்பையா, விடுதலை சிறுத்தை வீரமணி, கேசவ மருகன், இ.கம்.மோகன், மாணிக்கம் பெரியசாமி, கம்.பரமசிவம் உட்பட ஏராளமான தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...