'டாஸ்மாக்' கடையை உடனே அகற்றணும்: திருப்பூரில் பொதுமக்கள் ஆவேசம்.!!

திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம். ஒரு வாரக் காலத்தில் கடையை அகற்றாவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.



பிரசித்தி பெற்ற கொங்கணகிரி முருகன் கோயில் மாவட்டத்திலேயே அதிக மாணவர்கள் பயிலக் கூடிய சிக்கண்ணா அரசு கல்லூரி ஆகியவை மிக அருகாமையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையால் கோவிலுக்குச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமையில் இன்று கடை முன்பாக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்னும் ஒரு வாரக் காலத்தில் கடையை அகற்றாவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடை முன்பாக தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் கட்சியினர் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...