திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம். ஒரு வாரக் காலத்தில் கடையை அகற்றாவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

பிரசித்தி பெற்ற கொங்கணகிரி முருகன் கோயில் மாவட்டத்திலேயே அதிக மாணவர்கள் பயிலக் கூடிய சிக்கண்ணா அரசு கல்லூரி ஆகியவை மிக அருகாமையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையால் கோவிலுக்குச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமையில் இன்று கடை முன்பாக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்னும் ஒரு வாரக் காலத்தில் கடையை அகற்றாவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடை முன்பாக தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் கட்சியினர் தெரிவித்தனர்.
திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
பிரசித்தி பெற்ற கொங்கணகிரி முருகன் கோயில் மாவட்டத்திலேயே அதிக மாணவர்கள் பயிலக் கூடிய சிக்கண்ணா அரசு கல்லூரி ஆகியவை மிக அருகாமையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையால் கோவிலுக்குச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமையில் இன்று கடை முன்பாக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்னும் ஒரு வாரக் காலத்தில் கடையை அகற்றாவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடை முன்பாக தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் கட்சியினர் தெரிவித்தனர்.