வாரத்தில் நான்கு முதல் ஐந்து முறை விஷ பாம்புகளும், தேள், பூரான் போன்ற விஷப் பூச்சிகளும் குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும், இது குறித்து தகவல் அளிக்கையில் தீயணைப்புத்துறையினர் பாம்புகளைப் பிடித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளதாகத் தெரிவித்தனர்.
கோவை: அத்தியாவசிய தேவைகளை உடனடியாக ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பூதிமேடு புத்தர் நகரில் 287-குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1996-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையினர் மூலம் இலவச வீட்டுமனைப்பட்டா பட்டியலின மக்களுக்காக வழங்கப்பட்டது.

கடந்த 25-ஆண்டுகளாகக் குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம், சாக்கடை வசதிகள் இல்லாமல் சிரமத்திற்கு இடையே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தனர். மேலும் வாரத்தில் நான்கு முதல் ஐந்து முறை விஷ பாம்புகளும், தேள், பூரான் போன்ற விஷப் பூச்சிகளும் குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும், இது குறித்து தகவல் அளிக்கையில் தீயணைப்புத்துறையினர் பாம்புகளைப் பிடித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளதாகத் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகக் கூறி மனுக்களை அதிகாரிகள் நிராகரித்து வருவதாகவும், தங்களது பகுதியின் மீது இருந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்த போதும் அதையே காரணம் காட்டி காரமடை பேரூராட்சி அதிகாரிகள் அடிப்படை வசதிகளைப் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டினர்.

அத்தியாவசிய தேவைகளை உடனடியாக ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பூதிமேடு புத்தர் நகரில் 287-குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1996-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையினர் மூலம் இலவச வீட்டுமனைப்பட்டா பட்டியலின மக்களுக்காக வழங்கப்பட்டது.
கடந்த 25-ஆண்டுகளாகக் குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம், சாக்கடை வசதிகள் இல்லாமல் சிரமத்திற்கு இடையே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தனர். மேலும் வாரத்தில் நான்கு முதல் ஐந்து முறை விஷ பாம்புகளும், தேள், பூரான் போன்ற விஷப் பூச்சிகளும் குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும், இது குறித்து தகவல் அளிக்கையில் தீயணைப்புத்துறையினர் பாம்புகளைப் பிடித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளதாகத் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகக் கூறி மனுக்களை அதிகாரிகள் நிராகரித்து வருவதாகவும், தங்களது பகுதியின் மீது இருந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்த போதும் அதையே காரணம் காட்டி காரமடை பேரூராட்சி அதிகாரிகள் அடிப்படை வசதிகளைப் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டினர்.
அத்தியாவசிய தேவைகளை உடனடியாக ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.