கோவையில் ரயில் மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் துண்டாகி பரிதாபமாக பலி..!!

இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியாத நிலையில், அடையாளம் தெரிந்தவர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் ரயில் மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் துண்டாகி பலியான சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை ரயில் மோதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் துண்டாகி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை? இது குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு தெரிவிக்க அடையாளம் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

உடை, அங்கமச்ச அடையாளம்

1.ரோஸ்கலர் முழுக்கை சட்டை

2.முக்காகால் பார்மடாஸ் மஞ்சள் பேண்ட்.

3.வலது பக்க மார்பில் ஒரு மச்சம்

4.இடது மார்பில் ஒரு காயத்தழும்பு.

5.உடல் வெள்ளை நிறம்.



மேட்டுப்பாளையம் இரயில்வே காவல் உதவி ஆய்வாளர் N.சந்தி, மற்றும் தலைமை காவலர் ஜெயசித்ரா(Crime No 13/2021) வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அடையாளம் தெரிந்தால் (94981 27499, 04254-222925) என்ற தெலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...