வால்பாறை அருகே கல்லார் ஆதிவாசி மக்கள் மூன்றாம் நாளாக கவனயீர்ப்பு போராட்டம்..!

தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் வழங்க கோரி மூன்றாம் நாளாக ஆதிவாசி பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் வழங்க கோரி மூன்றாம் நாளாக ஆதிவாசி பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கல்லார் ஆதிவாசி மக்கள் மூன்றாம் நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை அருகே கல்லார் ஆதிவாசி பழங்குடி கிராமத்தில் சுமார் இருபத்தி மூன்று குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். கடந்த 2018ம் ஆண்டு அதிக கன மழை பெய்து வனப் பகுதியில் நிலச்சரிவு மரங்கள் சரிந்து விழுந்து பாதிக்கப்பட்டது.

இதில் கல்லார் ஆதிவாசி பழங்குடியினர் கிராமமும் பாதிக்கப்பட்டது. அங்கு வாழ முடியாமல் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்படும் என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

மேலும், அதிக கன மழை பெய்து வந்ததால் அங்கு தங்க முடியாமல் வனப்பகுதியில் பாதுகாப்பான இடத்தில் குடிசைகள் அமைத்து தங்கினர். அதை சட்டத்திற்குப் புறம்பானது என்று வனத்துறையினர் குடிசைகளை அப்புறப்படுத்தி மாவட்ட ஆட்சியரின் மற்றும் சார் ஆட்சியர் வன அலுவலர்கள் 23 குடும்பங்களை தாய்முடி எஸ்டேட் தோட்ட குடியிருப்பில் தங்க வைத்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்து வாழ்ந்து வருகின்றனர். ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கிணங்க தெப்பக்குளம் மேடு என்ற பகுதியை இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது வரை அங்கு இடம் அவர்களுக்கு வழங்காததைக் கண்டித்தும் கடந்த 3 ஆண்டுகளாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் தங்க வைத்திருப்பதாகவும் ஆதிவாசி பழங்குடியின மக்களின் கலாச்சாரமும் சுதந்திரமும் பாதிக்கப்படுவதாகவும் கூறி தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் ஒதுக்கித் தர தெப்பக்குளம் மேடு வனப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.



தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் நான தேவ் ராவ் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் ஆகியவர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு வந்து ஆதிவாசி பழங்குடி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இடங்களில் வாழும் ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு ஏற்கனவே இருந்த இடங்களை அளவு செய்து தேசிய புலிகள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதை மாற்றுவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதாகவும் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, அவை அரசாங்கத்தின் ஒப்புதலின்படி அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் சிறிது காலம் ஆகும், அதை சரியான முறையில் நடத்தி தருவதாகவும் தற்சமயம் போராட்டத்தை கைவிட்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆதிவாசி பழங்குடி மக்கள் சார் ஆட்சியர் இடமும், கலை இயக்குனர் இடமும் மூன்று ஆண்டுகளாக தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் பழங்குடியின கிராமத்தில் பெண்களுக்கு தேவையான தனிமையில் இருந்து சுதந்திரமாக இருந்தோம் உணவு பழக்கங்கள் மாறிவிட்டது. எங்களுடைய கலாச்சாரமும் மாறிவிட்டது. ஆதலால், அரசாங்கம் எங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.



ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மூன்றாம் நாளாக இன்று ஆதிவாசி பழங்குடி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று கல்லார் செட்டில்மெண்ட் மக்களுக்கு தெப்பக்குளம் மேட்டில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...