கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் பேருந்து பயணச்சீட்டு பரிசோதகர் உயிரிழப்பு.!!!

விபத்து குறித்து உயிரிழந்த ஞானப்பிரகாசனின் மகன் பாலமுருகன் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் பேருந்து பயணச்சீட்டு பரிசோதகர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 64) இவர் பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் பணியாற்றி வருகிறார்

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு இரவு பொள்ளாச்சியில் இருந்து பேருந்து மூலம் கோவில்பாளையம் வந்துள்ளார்.

கோவில்பாளையம் பஸ் நிறுத்தத்திலிருந்து எதிரே சாலையை கடக்க முயன்ற போது பொள்ளாச்சி கோவை சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்றுள்ளது

இந்த விபத்தில் ஞானப்பிரகாசுக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஞானப்பிரகாசத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஞானபிரகாஷ் உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்து சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் ஞானப்பிரகாசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்

இந்த விபத்து குறித்து உயிரிழந்த ஞானப்பிரகாசனின் மகன் பாலமுருகன்(34) கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...