விபத்து குறித்து உயிரிழந்த ஞானப்பிரகாசனின் மகன் பாலமுருகன் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் பேருந்து பயணச்சீட்டு பரிசோதகர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 64) இவர் பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் பணியாற்றி வருகிறார்
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு இரவு பொள்ளாச்சியில் இருந்து பேருந்து மூலம் கோவில்பாளையம் வந்துள்ளார்.
கோவில்பாளையம் பஸ் நிறுத்தத்திலிருந்து எதிரே சாலையை கடக்க முயன்ற போது பொள்ளாச்சி கோவை சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்றுள்ளது
இந்த விபத்தில் ஞானப்பிரகாசுக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஞானப்பிரகாசத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஞானபிரகாஷ் உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்து சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் ஞானப்பிரகாசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்
இந்த விபத்து குறித்து உயிரிழந்த ஞானப்பிரகாசனின் மகன் பாலமுருகன்(34) கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 64) இவர் பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் பணியாற்றி வருகிறார்
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு இரவு பொள்ளாச்சியில் இருந்து பேருந்து மூலம் கோவில்பாளையம் வந்துள்ளார்.
கோவில்பாளையம் பஸ் நிறுத்தத்திலிருந்து எதிரே சாலையை கடக்க முயன்ற போது பொள்ளாச்சி கோவை சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்றுள்ளது
இந்த விபத்தில் ஞானப்பிரகாசுக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஞானப்பிரகாசத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஞானபிரகாஷ் உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்து சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் ஞானப்பிரகாசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்
இந்த விபத்து குறித்து உயிரிழந்த ஞானப்பிரகாசனின் மகன் பாலமுருகன்(34) கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.