பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுள்ள 75- ஆயிரம் தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.!!

பொள்ளாச்சியில் தென்னை நார் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி துறையில் 70- சதவீத தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தென்னை நார் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி துறையில் 70- சதவீத தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இதுகுறி்த்து, தென்னைநார் தொழில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின்(United Nation Development Program)ஆலோசகர் மற்றும் மத்திய அரசு, கயிறு வாரியத்தின் உறுப்பினர், எஸ்.கே. கவுதமன் கூறியதாவது:-

தென்னைநார் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்வதில் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

காயர் ஜியோ ஓவன் டெக்ஸ்டைல்ஸ், காயர்வுட், தலை விரிப்புகள், தென்னை நார் கொண்டு செய்யப்படும் அலங்காரப் பொருட்கள், கோ கோ பித் கொண்டு விவசாயம் செய்வது என்பது உள்ளிட்டவை இத்துறையில் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் ஆகும்.

தென்னை நார் தொழிலில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி 50% அதாவது 2,000 கோடி ரூபாய் பங்களிப்பு கொண்டுள்ளது.

அதேபோல், உள்நாட்டு மொத்த வணிகத்தில் பொள்ளாச்சி 5- ஆயிரம் கோடி ரூபாய் பங்களிப்பு கொண்டுள்ளது.

பொள்ளாச்சியில் தென்னை நார் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1.25-லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இவர்களில் 60-சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழக அரசு சார்பில் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் விரைவில் தென்னைநார் கயிறு தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...