பொள்ளாச்சியில் தென்னை நார் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி துறையில் 70- சதவீத தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தென்னை நார் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி துறையில் 70- சதவீத தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இதுகுறி்த்து, தென்னைநார் தொழில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின்(United Nation Development Program)ஆலோசகர் மற்றும் மத்திய அரசு, கயிறு வாரியத்தின் உறுப்பினர், எஸ்.கே. கவுதமன் கூறியதாவது:-
தென்னைநார் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்வதில் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
காயர் ஜியோ ஓவன் டெக்ஸ்டைல்ஸ், காயர்வுட், தலை விரிப்புகள், தென்னை நார் கொண்டு செய்யப்படும் அலங்காரப் பொருட்கள், கோ கோ பித் கொண்டு விவசாயம் செய்வது என்பது உள்ளிட்டவை இத்துறையில் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் ஆகும்.
தென்னை நார் தொழிலில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி 50% அதாவது 2,000 கோடி ரூபாய் பங்களிப்பு கொண்டுள்ளது.
அதேபோல், உள்நாட்டு மொத்த வணிகத்தில் பொள்ளாச்சி 5- ஆயிரம் கோடி ரூபாய் பங்களிப்பு கொண்டுள்ளது.
பொள்ளாச்சியில் தென்னை நார் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1.25-லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இவர்களில் 60-சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழக அரசு சார்பில் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் விரைவில் தென்னைநார் கயிறு தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறி்த்து, தென்னைநார் தொழில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின்(United Nation Development Program)ஆலோசகர் மற்றும் மத்திய அரசு, கயிறு வாரியத்தின் உறுப்பினர், எஸ்.கே. கவுதமன் கூறியதாவது:-
தென்னைநார் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்வதில் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
காயர் ஜியோ ஓவன் டெக்ஸ்டைல்ஸ், காயர்வுட், தலை விரிப்புகள், தென்னை நார் கொண்டு செய்யப்படும் அலங்காரப் பொருட்கள், கோ கோ பித் கொண்டு விவசாயம் செய்வது என்பது உள்ளிட்டவை இத்துறையில் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் ஆகும்.
தென்னை நார் தொழிலில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி 50% அதாவது 2,000 கோடி ரூபாய் பங்களிப்பு கொண்டுள்ளது.
அதேபோல், உள்நாட்டு மொத்த வணிகத்தில் பொள்ளாச்சி 5- ஆயிரம் கோடி ரூபாய் பங்களிப்பு கொண்டுள்ளது.
பொள்ளாச்சியில் தென்னை நார் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1.25-லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இவர்களில் 60-சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழக அரசு சார்பில் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் விரைவில் தென்னைநார் கயிறு தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.