கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சாலை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என பொள்ளாச்சி கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம்!

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, சாலை மேம்பாடு போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா தொற்றின் காரணமான கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படவில்லை எனவும், அரசின் விதிமுறையின் படி இன்று கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தைப்பொறுத்தவரை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ஒன்றியங்களில் உள்ள 228 ஊராட்சிகள் உள்ளன. இதில் இடைத்தேர்தல் நடைபெறும் 36 ஊராட்சிகளைத் தவிர்த்து 192 ஊராட்சிகளில் இன்று கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சபரி நித்யா தலைமையில் அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கிராமச்சபைக்கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு முறையாக ஏற்படுத்துவது மற்றும் பல ஆண்டுகளாக போடப்படாத தார் சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதேப்போல், சின்னாம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தகுமார் தலைமையிலும், மாக்கினாம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் அழகிரிசாமி தலைமையில் கிராமசபைக்கூட்டங்கள் நடைபெற்றது.



இதில் கர்ப்பிணிப் பெண்கள் தவறாமல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையாகப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும் மற்றும் முதல்வர் அறிவித்துள்ள மக்களை தேடி மருத்துவத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...