கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களுக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்..!

கோவை, ஈரோடு உள்பட 4 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் பருவ மழைக்கும் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 20ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மலைப்பிரதேசங்களில் பருவமழை தொடர்பான விழிப்புணர்வுகளை பொது மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை கண்காணிக்க மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் பருவ மழைக்கும் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கோவை மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலராக முருகானந்தம், நீலகிரி மாவட்டத்திற்கு சுப்ரியா சாகு, ஈரோடு காகர்லா உஷா, திருப்பூர் கோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...