முதல்நாள் நிகழ்ச்சியாக வனம் மற்றும் வன விலங்கு குறித்த விழிப்புணர்வு காணொளி காட்சி வெளியிடப்பட்டது.
கோவை: ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரம் வன விலங்கு வார விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வன கோட்டத்துக்கு உட்பட்ட உடுமலையில் முதல்நாள் நிகழ்ச்சியாக வனம் மற்றும் வன விலங்கு குறித்த விழிப்புணர்வு காணொளி காட்சி வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மாவட்ட வன அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேஜஸ்வி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் வனச்சரகர்கள் தனபாலன், சுரேஷ், மகேஷ் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, வரும் வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும், இணைய வழியிலான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வன கோட்டத்துக்கு உட்பட்ட உடுமலையில் முதல்நாள் நிகழ்ச்சியாக வனம் மற்றும் வன விலங்கு குறித்த விழிப்புணர்வு காணொளி காட்சி வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மாவட்ட வன அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேஜஸ்வி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் வனச்சரகர்கள் தனபாலன், சுரேஷ், மகேஷ் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, வரும் வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும், இணைய வழியிலான கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.