இரண்டு உழவர் சந்தைகளைக் கோவை மாவட்டத்தில் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. துடியலூர், அன்னூர், குரும்பப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய்த வேளாண் வணிகத் துறையினர் அதற்கான இடத்தை தேடி வருகின்றனர்.
கோவை: தமிழகத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும் நுகர்வோருக்குக் குறைந்த விலையில் காய்கறி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் ஆர்.எஸ் புரம் சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
மேலும் இரண்டு உழவர் சந்தைகளைக் கோவை மாவட்டத்தில் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. துடியலூர், அன்னூர், குரும்பப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய்த வேளாண் வணிகத் துறையினர் அதற்கான இடத்தை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி கூறியதாவது:-
பேரூராட்சி பகுதியில் உழவர் சந்தைகள் அமைக்க வேண்டாம். கிராமப்பகுதிகளில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே காய்கறிகளை அன்றே வாங்கி செல்லும் வகையில் அதிகமான வாடிக்கையாளர்கள் வரக் கூடிய இடமாகத் தேட வேண்டியது உள்ளது.
தகுதியான இடம் தேர்வு செய்தவுடன் விரைவில் உழவர் சந்தைகள் திறக்கப்படும் இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் ஆர்.எஸ் புரம் சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.
மேலும் இரண்டு உழவர் சந்தைகளைக் கோவை மாவட்டத்தில் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. துடியலூர், அன்னூர், குரும்பப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய்த வேளாண் வணிகத் துறையினர் அதற்கான இடத்தை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி கூறியதாவது:-
பேரூராட்சி பகுதியில் உழவர் சந்தைகள் அமைக்க வேண்டாம். கிராமப்பகுதிகளில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே காய்கறிகளை அன்றே வாங்கி செல்லும் வகையில் அதிகமான வாடிக்கையாளர்கள் வரக் கூடிய இடமாகத் தேட வேண்டியது உள்ளது.
தகுதியான இடம் தேர்வு செய்தவுடன் விரைவில் உழவர் சந்தைகள் திறக்கப்படும் இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.