கோவை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 3-மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் 46,200 -ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி சார்பதிவாளர் அலுவலகத்திலும் கணக்கில் வராத பணம் பறிமுதல்.
கோவை: கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் 2-சோதனை சாவடிகளில் ரூபாய் 46-ஆயிரம் ஆய்வில் சிக்கியது. மேலும், நீலகிரி சார்பதிவாளர் அலுவலகத்திலும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாகப் புகார் எழுந்ததை அடுத்து நேற்று இரவு முழுவதும் தமிழகம் முழுவதிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனைச்சாவடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் அங்குலம் அங்குலமாகச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
போலீசார் அங்கு உள்ள ஆவணங்களைச் சரிபார்த்தனர். அப்போது அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூபாய் 21,600 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல கே.ஜி.சாவடி சோதனைச் சாவடிகளும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.
இதில் ரூபாய் 25,000 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 3-மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் ரூபாய் 46,200 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகா அலுவலகம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கணக்கில் வராத ரூபாய் 78 ஆயிரத்து 490 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சில ஆவணங்களையும் போலீஸ் அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக துணைப்பதிவாளர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்களிடம் இருந்து வருகிறது.
தமிழகத்தில் மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாகப் புகார் எழுந்ததை அடுத்து நேற்று இரவு முழுவதும் தமிழகம் முழுவதிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனைச்சாவடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் அங்குலம் அங்குலமாகச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
போலீசார் அங்கு உள்ள ஆவணங்களைச் சரிபார்த்தனர். அப்போது அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூபாய் 21,600 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல கே.ஜி.சாவடி சோதனைச் சாவடிகளும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.
இதில் ரூபாய் 25,000 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 3-மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் ரூபாய் 46,200 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகா அலுவலகம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கணக்கில் வராத ரூபாய் 78 ஆயிரத்து 490 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சில ஆவணங்களையும் போலீஸ் அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக துணைப்பதிவாளர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்களிடம் இருந்து வருகிறது.