கோவையில் சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- 46,000 ரூபாய் சிக்கியது.!!!

கோவை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 3-மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் 46,200 -ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி சார்பதிவாளர் அலுவலகத்திலும் கணக்கில் வராத பணம் பறிமுதல்.


கோவை: கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் 2-சோதனை சாவடிகளில் ரூபாய் 46-ஆயிரம் ஆய்வில் சிக்கியது. மேலும், நீலகிரி சார்பதிவாளர் அலுவலகத்திலும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாகப் புகார் எழுந்ததை அடுத்து நேற்று இரவு முழுவதும் தமிழகம் முழுவதிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனைச்சாவடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் அங்குலம் அங்குலமாகச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

போலீசார் அங்கு உள்ள ஆவணங்களைச் சரிபார்த்தனர். அப்போது அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூபாய் 21,600 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல கே.ஜி.சாவடி சோதனைச் சாவடிகளும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.

இதில் ரூபாய் 25,000 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 3-மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் ரூபாய் 46,200 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகா அலுவலகம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கணக்கில் வராத ரூபாய் 78 ஆயிரத்து 490 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சில ஆவணங்களையும் போலீஸ் அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக துணைப்பதிவாளர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்களிடம் இருந்து வருகிறது.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...