திருப்பூரில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளி விழாவையொட்டி சட்ட விழிப்புணர்வு முகாம்.!!

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளி விழாவை முன்னிட்டு 45- நாட்களுக்கு அரசு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. இதன் துவக்க விழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது.


திருப்பூர்: தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளி விழாவை முன்னிட்டு 45- நாட்களுக்கு அரசு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. இதன் துவக்க விழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு 25-ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நாளை (அக்டோபர் 2ம் தேதி) முதல் நவம்பர் 14-ம் தேதி வரை 45-நாட்களுக்கு வெள்ளிவிழா கொண்டாடப்பட உள்ளது.



இதையொட்டி, திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 45-நாட்களுக்கு இந்த விழாவானது கொண்டாடப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு சட்டம் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நீதித்துறை ஆதிதிராவிடர் நலத்துறை சமூக நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை வருவாய்த் துறை காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் இந்த 45- நாட்களும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நாள்தோறும் வட்ட அளவில் பொதுமக்களுக்குச் சட்டம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

இதன் துவக்க விழாவானது சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...