வடவள்ளியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடிவருகின்றனர்!

கோவை வடவள்ளியைச்சேர்ந்த பெண்ணிடம் 6 பவுன் செயினை பறித்த நபர்களை சிசிடிவி காட்சியின் உதவியோடு போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள பெரியார் நகரைச்சேர்ந்தவர் 65 வயதான சரோஜா. இவர் நேற்று மாலை தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள சென்றுள்ளார்.

அப்போது இவ்விருவரும் சாலையில் நடந்துச்சென்றுக்கொண்டிருந்த போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளிலில் வந்த வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சரோஜா அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினைப்பறித்து சென்றுவிட்டனர். இதனால் அச்சத்தில் திருடன், திருடன் என்று கத்தியோடு நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

இதனைடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு காயம்அடைந்த சரோஜாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுக்குறித்து பாதிக்கப்படம்ட பெண் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து இந்த புகாரின் பேரின் வழக்குப்பதிவுச் செய்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை அப்பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு தேடி வருகின்றனர். மேலும் தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...