'எனக்கு என் குழந்தை வேணும்'... கோவையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயற்சி.!!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு 25-வயது மதிக்கத்தக்க ஒரு பெண் புகார் கொடுக்க வந்த போது திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு 25-வயது மதிக்கத்தக்க ஒரு பெண் புகார் கொடுக்க வந்தார். அப்போது அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.

இதை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றினார். தொடர்ந்து அவரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் தர்மபுரியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (27), என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர் போலீசாரிடம் கூறும்போது எனது சொந்த ஊர் தருமபுரி எனக்கு ஜெகதீஸ்வர் என்பவருடன் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக நான் என் கணவரைப் பிரிந்து கோவையில் தங்கி கூலி வேலைக்குச் சென்று வருகிறேன்.

எனது மகன் கணவருடன் உள்ளார். எனது மகனை என்னுடன் அனுப்ப மறுத்து வருகின்றனர். எனவே, மகனை என்னுடன் சேர்த்து வாழ வைக்க வேண்டும். இது தொடர்பாகக் கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தேன். அப்போது கையில் மண்னைண்னையும் எடுத்து வந்து உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றேன்.

ஆனால் அதனை தடுத்து நிறுத்தி போலீசார் என்னை காப்பாற்றி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீசார் ஐஸ்வர்யா மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...