திருப்பூரில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு.!!

திருப்பூரில் 75-வது சுதந்திர தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சைக்கிளத்தான் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் 75-வது சுதந்திர தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சைக்கிளத்தான் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாடக்கூடிய சூழ்நிலையில் 75-வது ஆண்டு சுதந்திரம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான சைக்கிளத்தான் எனப்படும் சைக்கிள் பயண நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் மாநகராட்சி அலுவலகத்தில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

இதில் சிறுவர்-சிறுமியர் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு 8-கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். இதில் 75-வது ஆண்டு சுதந்திர தினம், பெண்கள் பாதுகாப்பு, ஸ்மார்ட் சிட்டி மற்றும் கொரோனா தடுப்பூசி போடுதல் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த சைக்கிள் பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...