மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கோவை கங்கா மருத்துவமனையில் விழிப்புணர்வு முகாம்..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் மார்பகம் அகற்றப்படும் நிலைமையை மாற்றி, அடி வயிற்றில் இருக்கும் தசைகளை ரத்தக்குழாய் உடன் எடுத்து மார்பகப் பகுதியில் ரத்தக்குழாய் உடன் இணைத்து புதியதொரு மார்பகத்தை உருவாக்குகின்றனர்.


கோவை: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கோவை கங்கா மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்களை தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதன்மையானது. மற்ற புற்றுநோயால் பெண்கள் இறப்பதை விட மார்பக புற்றுநோயால் இறப்பது கூடுதலாகவே உள்ளது.

பெண்களுக்கு தங்கள் அந்தரங்க பிரச்சனைகளைக் கூறுவதில் என்றும் தயக்கம் இருக்கும். இதில் படித்தவர் படிக்காதவர் என்று குறிப்பிட முடியாது. அத்தயக்கமானது உயிரையே கொள்ளும் என்று பலரும் அறிவதில்லை. அதனால் உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக வெளியிட்டுள்ளது.



அதனை தொடர்ந்து, இன்று கங்கா மருத்துவமனையில் காலை 10:30 மணி முதலே - மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அவ்விழிப்புணர்வு விழிப்புணர்வு முகாமில் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன என்ன? சுயமாக மார்பகங்களை எவ்வாறு பரிசோதித்துக்கொள்வது, "டயாக்னாஸ்டிக் மேமோகிராம்" பரிசோதனை பற்றியும், கங்கா மருத்துவமனை செவிலியர்கள் தெளிவுரை அழித்தனர். மேலும், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.



பெண்களை பாதிக்கும் புற்றுநோயில், மூன்றில் ஒரு பங்காக மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோயின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது, வாழ்வியல் மாற்றத்தால் மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகின்றது.

உடலுக்கு எக்ஸ் - ரே போன்று, மார்பக பரிசோதனை செய்ய பயன்படும் பிரத்யேக கருவி, ‘மேமோகிராம்!’

மார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால், தெரிந்து கொள்ள உதவும் இது. 35 வயதிற்கு முன், ‘மேமோகிராம்’ பரிசோதனையை செய்யக் கூடாது. காரணம், இந்தப் பரிசோதனையில், கதிர்வீச்சை உடலினுள் செலுத்தியே பரிசோதிக்கிறோம்; கதிர் வீச்சால் பாதிப்புகள் ஏற்படலாம். நாற்பது வயதிற்கு மேல், மரபியல் ரீதியில், அதிக, ‘ரிஸ்க்’ உள்ள பெண்கள், ஆண்டிற்கு ஒருமுறை எக்ஸ் - ரே செய்து கொள்ளலாம்; மற்றவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யலாம்.



பெரிதும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் மார்பகம் அகற்றப்படுகிறது, இந்நிலைமையை மாற்ற கங்கா மருத்துவமனை அடி வயிற்றில் இருக்கும் தசைகளை ரத்தக்குழாய் உடன் எடுத்து மார்பகப் பகுதியில் ரத்தக்குழாய் உடன் இணைத்து புதியதொரு மார்பகத்தை உருவாக்குகின்றனர். நவீன சிகிச்சையின் பெயர் DIEP flap. இது மைக்ரோ சர்ஜரி மூலம் செய்யப்படுகிறது. மார்பக சீரமைப்புக்காக இதுவே தலைசிறந்த முறை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெண்கள் பெரிதும், மார்பக அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன்னம்பிக்கையை இலக்கும் நிலையில் இது பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...