தமிழக-கேரள ஒப்பந்தத்தின்படி வருடத்திற்கு நான்கு மாதங்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நீராறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கோவை: தமிழக கேரளா ஒப்பந்தப்படி வால்பாறையில் உள்ள நீராறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சின்னக்கல்லாறு அணை, நீராறு அணை, சோலையாறு அணை ஆகிய அணைகள் உள்ளன. வால்பாறை பகுதி கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இந்த மழை நீரை சேமிக்க சின்னக்கல்லாறு அணை, நீராறு அணை மற்றும் சோலையாறு அணைகள் உள்ளது. அணையிலிருந்து வெளியேறக்கூடிய தண்ணீரானது கேரளா வனப்பகுதிக்கு சென்று கேரளா மாநிலத்துக்கு வழங்கப்படுகிறது.
இதனை, தமிழக அரசு தமிழக மக்களுக்குப் பயன்படும் வகையில் சுரங்கப் பாதைகள் மூலம் அணையிலிருந்து தண்ணீரை மின்சாரம் தயாரித்து பரம்பிக்குளம் அணைக்குக் கொண்டு சென்று அங்கிருந்து காண்டூர் கால்வாய் திட்டத்தின் கீழ் அமராவதி அணைக்கு நீர் வந்து சேரும்.
பின்னர், அமராவதி அணையிலிருந்து கோவை, திருப்பூர், உடுமலை, தாராபுரம், காங்கயம், கரூர் போன்ற பகுதிகளுக்குத் தண்ணீர் விவசாயத்திற்குச் செல்கிறது.
தமிழக-கேரள ஒப்பந்தத்தின்படி வருடத்திற்கு நான்கு மாதங்கள் என அக்டோபர் 1ம் தேதி 9 மணியிலிருந்து, பிப்ரவரி 1ம் தேதி 9 மணி வரை நீராறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இன்று காலை நீராறு அணையிலிருந்து 9 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தையும் நான்கு மாதங்களுக்குத் திறந்து விடும்படி ஒப்பந்தத்தில் உள்ளதால் அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கேரளா மாநில நீர்நிலை அதிகாரிகள் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை நீர்நிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 236 கனஅடி வீதம் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், தண்ணீர் வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகள் தண்ணீர் அருந்தவும், கேரளா மாநிலத்தில் உள்ள இடைமலையாறு அணைக்கு செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சின்னக்கல்லாறு அணை, நீராறு அணை, சோலையாறு அணை ஆகிய அணைகள் உள்ளன. வால்பாறை பகுதி கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இந்த மழை நீரை சேமிக்க சின்னக்கல்லாறு அணை, நீராறு அணை மற்றும் சோலையாறு அணைகள் உள்ளது. அணையிலிருந்து வெளியேறக்கூடிய தண்ணீரானது கேரளா வனப்பகுதிக்கு சென்று கேரளா மாநிலத்துக்கு வழங்கப்படுகிறது.
இதனை, தமிழக அரசு தமிழக மக்களுக்குப் பயன்படும் வகையில் சுரங்கப் பாதைகள் மூலம் அணையிலிருந்து தண்ணீரை மின்சாரம் தயாரித்து பரம்பிக்குளம் அணைக்குக் கொண்டு சென்று அங்கிருந்து காண்டூர் கால்வாய் திட்டத்தின் கீழ் அமராவதி அணைக்கு நீர் வந்து சேரும்.
பின்னர், அமராவதி அணையிலிருந்து கோவை, திருப்பூர், உடுமலை, தாராபுரம், காங்கயம், கரூர் போன்ற பகுதிகளுக்குத் தண்ணீர் விவசாயத்திற்குச் செல்கிறது.
தமிழக-கேரள ஒப்பந்தத்தின்படி வருடத்திற்கு நான்கு மாதங்கள் என அக்டோபர் 1ம் தேதி 9 மணியிலிருந்து, பிப்ரவரி 1ம் தேதி 9 மணி வரை நீராறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இன்று காலை நீராறு அணையிலிருந்து 9 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தையும் நான்கு மாதங்களுக்குத் திறந்து விடும்படி ஒப்பந்தத்தில் உள்ளதால் அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கேரளா மாநில நீர்நிலை அதிகாரிகள் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை நீர்நிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 236 கனஅடி வீதம் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், தண்ணீர் வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகள் தண்ணீர் அருந்தவும், கேரளா மாநிலத்தில் உள்ள இடைமலையாறு அணைக்கு செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.