கோவையில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்த 2-பேர் கைது.!!

கோவை மாநகர் காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறை போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொருட்களை அழிப்பதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.


கோவை: கோவை மாநகர் காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறை போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொருட்களை அழிப்பதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இருந்தாலும், தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. கோவை போத்தனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் கோணவாய்க்கால் ரயில் பாலம் அருகே சிலர் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசியத் தகவல் காவல்துறைக்கு வந்தது.

இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் தலைமையிலான காவல்துறை தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்குப் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த போத்தனூர் சாரதாமில் ரோட்டை சேர்ந்த பிரசாந்த் வயது 31, என்பவரைக் கைது செய்தனர்.

அவரிடம் இருந்த 10-போதை மாத்திரைகளை காவல்துறை பறிமுதல் செய்தனர். சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் கோட்டை ராமசாமி நாயக்கர் வீதி வழியாக ரோந்து சென்றனர்.

அங்குக் கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த கோட்டைமேட்டை சேர்ந்த முகம்மது யூசுப் 60, என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 500-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...