விபத்து ஏற்படுத்தியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர் கிணத்துக்கடவு போலீசில் புகார்!

கிணத்துக்கடவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை விபத்துக்குள்ளாக்கிய வழக்கில், சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் மேட்டுக்கடை வீதியைசேர்ந்தவர் 52 வயதான பாலவடிவேல்.

இவர் கடந்த 26 ஆம் தேதி தனது நண்பர் சகாதேவனை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தாமரைக்குளம் சர்வீஸ் சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே வழியில் அவருக்குப்பின்னால் மற்றொரு இருசக்கர வாகனம், பாலவடிவேல் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாலவடிவேலு அவரது நண்பர் சகாதேவன் மற்றும் விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் இருந்த அர்ஜுன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் படுகாயமடைந்த மூன்று பேரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி மட்டும் பெற்றுக்கொண்ட நிலையில் தற்போமு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் தான், வாகன விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கைக்கோரி இன்று பாதிக்கப்பட்ட பால வடிவேலு கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப்புகாதைப்பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இருசக்கர வாகன விபத்தை ஏற்படுத்திய கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்த அர்ஜூன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...