கிணத்துக்கடவில் 3-வது நாளாக ஓவர் லோடு ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்.!!

கோவை மாவட்ட எஸ்.பி., உத்தரவுப்படி கிணத்துக்கடவு பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து 3-வது நாளாக ஓவர் லோடு ஏற்றி வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்ட எஸ்.பி., உத்தரவுப்படி கிணத்துக்கடவு பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து 3-வது நாளாக ஓவர் லோடு ஏற்றி வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாகவும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கிணத்துக்கடவு காவல்துறையினர் கடந்த 28-ஆம் தேதி முதல் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 28, 29-தேதிகளில் நடத்திய சோதனையில் அதிகம் பாரம் ஏற்றி வந்த 4-லாரிகளை பறிமுதல் செய்து ஒரு லட்சத்து 49-ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் கிணத்துக்கடவு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது காரசேரி பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, தலைமைக் காவலர் செல்வகுமார் ஆகியோர் வாகனத்தை ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த இரண்டு லாரிகளை சோதனை செய்தபோது அதில் அரசு நிர்ணயித்த அளவைவிடக் கூடுதலாகப் பாறைக் கற்கள் மற்றும் எம் சாண்ட் மணல் இருந்தது தெரியவந்தது

இதையடுத்து, இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் 56-ஆயிரத்து 720- ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...