கிணத்துக்கடவில் 3-வது நாளாக ஓவர் லோடு ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்.!!

கோவை மாவட்ட எஸ்.பி., உத்தரவுப்படி கிணத்துக்கடவு பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து 3-வது நாளாக ஓவர் லோடு ஏற்றி வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்ட எஸ்.பி., உத்தரவுப்படி கிணத்துக்கடவு பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து 3-வது நாளாக ஓவர் லோடு ஏற்றி வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாகவும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கிணத்துக்கடவு காவல்துறையினர் கடந்த 28-ஆம் தேதி முதல் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 28, 29-தேதிகளில் நடத்திய சோதனையில் அதிகம் பாரம் ஏற்றி வந்த 4-லாரிகளை பறிமுதல் செய்து ஒரு லட்சத்து 49-ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் கிணத்துக்கடவு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது காரசேரி பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, தலைமைக் காவலர் செல்வகுமார் ஆகியோர் வாகனத்தை ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த இரண்டு லாரிகளை சோதனை செய்தபோது அதில் அரசு நிர்ணயித்த அளவைவிடக் கூடுதலாகப் பாறைக் கற்கள் மற்றும் எம் சாண்ட் மணல் இருந்தது தெரியவந்தது

இதையடுத்து, இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் 56-ஆயிரத்து 720- ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...